Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னையில் மாநில மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் 25 வாகனங்களில் செல்வதும், சுவர் விளம்பரம் செய்வது குறித்தும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் விவசாய அணி மாநில செயலாளர் இரா.முருகன் தலைமையில் நாடார் திருமண மட்டத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் விஜயகுமார், நகரச் செயலாளர் செந்தில், கொள்கை பரப்பு விளக்க அணிச் செயலாளர் அழகுசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.